TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஊதியம் 15%வரை உயர்வு.. அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஊதியம் 15%வரை உயர்வு.. அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - ஊதியம் 15%வரை உயர்வு.. அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஊதியம் 15%வரை உயர்வு.. அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS நடப்பு ஆண்டு தங்களது ஊழியர்களுக்கு 12 முதல் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் தற்போது ஐடி துறையின் பணி நியமனம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக கடந்த வருடத்தின் இறுதியில் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்கம், ஊதிய குறைப்பு, சலுகைகள் நிறுத்தம் போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தமிழகத்தில் 11% டாஸ்மாக் கடைகள் மூடல் – அமைச்சர் முக்கிய தகவல்!

தற்போதும் இதே நிலை தொடர்ந்து வருகிறது. தனது மார்ஜின் அளவை தக்க வைக்கவும். நிர்வாக செலவுகளை குறைக்கவும் முயற்சித்து வருகிறது. இதற்கு மத்தியில் தற்போது பிரபல நிறுவனமான TCS நடப்பு நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி நடப்பு ஆண்டில் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கு 12 முதல் 15% வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதே போல பிற ஊழியர்களுக்கு 1.5 முதல் 8% வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு TCS ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது TCS நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,436 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!