தமிழகத்தில் மின்வாரியத் தறையில் வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக புதிய மஞ்சள் நிற கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கருவி
தமிழக அரசு மின்வாரிய துறையின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு மின்சார பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. அதாவது பொதுமக்கள் அளிக்கப்படும் புகார்களுக்கு தகுந்தவாறு தீர்வுகள் காணப்படுகிறது. குறிப்பாக வீடுகள் கம்பங்கள் ட்ரான்ஸ்பார்மர் களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின்வாரிய ஊழியர்கள் நேரில் செல்வார்கள்.
தமிழ் தெரிந்தால் அரசாங்க கோவிலில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
அவர்கள் மின்கம்பங்களில் ஏறி மின் ஒயர்களை பழுது பார்ப்பார்கள். சில நேரம் மின்சாரம் பாய்ந்து அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊழியர்களின் வசதிக்காக மஞ்சள் நிற கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் வேலை செய்யும் போது தங்களிடம் வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது ஹெல்மெட்டில் பொருத்திக் கொள்ள வேண்டும். இந்த கருவி மூலம் மின் ஒயர்கள் டிரான்ஸ்பார்மரில் வரும் வோல்டேஜ் எவ்வளவு இருக்கிறது என காண்பித்து விடும். அதனால் ஊழியர்கள் அதனை எப்படி கையாளலாம் என தெரிந்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக வோல்டேஜ் வந்தால் சிவப்பு நிற லைட்டும் பீப் சவுண்டும் எழுப்பி அலர்ட் செய்யும். 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாக வோல்டேஜ் கண்டறிந்து அலர்ட் செய்வதால் விபத்துக்கள் குறைக்கப்படும்.