சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
வெப்பநிலை உயர்வு:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நிலவும் அதிக வெப்பநிலையால் மாலை நேரத்தில் கூட வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயந்து கொண்டு இருக்கிறார்கள். சில நேரங்களில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் வாட்டி வதக்கப்பட்டது போல் உணர்கிறார்கள். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையமானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிகரிக்கும் வேலைவாய்ப்பு – ஒரு அலசல்!
இந்த அறிக்கையில் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 4) முதல் வரும் ஏப்ரல் 8ம் தேதி வரை 5 நாட்களுக்கு மேலும் வெயில் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற கடலோர பகுதிகளிலும் அதிக வெப்பநிலை நிலவும். வடக்கு கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் அதிக வெப்பத்தை எண்ணி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.