தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. வழக்கமாக இந்த மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும், ஆனால் தற்போது பரவலாக பெய்து வரும் கோடை மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட வானிலை ஆய்வு மைய அறிக்கையின் படி, விதர்பா (மகாராஷ்டிரா) முதல் உள் தமிழகம் வரை (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

20.04.2021, 21.04,2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

22.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பேரிடர் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் – மத்திய அரசு எச்சரிக்கை!!

23.04.2021,24.04.2021:

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு பாதியாக குறைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!

வெப்பநிலை முன்னறிவிப்பு:

20.04.2021 முதல் 21.04.2021 வரை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகக்கூடும்.

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!

தமிழகம், புதுவையில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடுமென்பதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர், மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழ வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!