1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படுவதாகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்த காரணத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் நோய் பாதிப்பு சற்று குறைந்தது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பினர். இந்நிலையில் 2021 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக வேகத்தில் பரவத் தொடங்கியது. கடந்த 10 நாட்களில் நோய்பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!!
கட்டுப்பாடுகள்:
இதனால் மாநில அரசுகள் தீவிர நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சிபிஎஸ்இ வாரியம் திடீரென்று 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தும், 12ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.
தேர்வுகள் தள்ளிவைப்பு:
இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் அங்கும் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தற்போது ஆந்திர மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வுகள், மற்றும் மே 5ம் தேதி நடக்க இருந்த 12ம் வகுப்பு தேர்வுகளையும் திட்டமிட்டபடி நடத்துவதாகவும், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடுவதற்கு ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் உத்திரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்