தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மதிப்பெண்களை அதிகரிக்கும் வகையில், மாநில அளவில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக குறைந்த கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்க மதிப்பெண் கட்டாயம். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் மாணவர்கள் தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பேரிடர் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் – மத்திய அரசு எச்சரிக்கை!!
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் அந்தந்த பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அனைவர்க்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் குறைந்தபட்சமாக 35 மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வுகள் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை அனைத்து மாணவர்களும் எழுதுவது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்த் தனித்தேர்வு மாணவர்கள் கொஞ்சம் கவனிங்க… Anna
Is it real