தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய போகுது – உஷாரா இருங்க மக்களே!

0
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய போகுது - உஷாரா இருங்க மக்களே!
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய போகுது - உஷாரா இருங்க மக்களே!
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய போகுது – உஷாரா இருங்க மக்களே!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஓரிரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்திய அஞ்சல் துறையின் “செல்வமகள் சேமிப்பு திட்டம்” – முழு விவரம் இதோ!

வெப்பநிலை குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். அதனைத் தொடர்ந்து செப் 9 – 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அடுத்ததாக செப் 10,11,12 ஆகிய தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஒரு வாரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!