பம்ப் ஆப்ரேட்டர்களுக்கான காலமுறை ஊதியம் – மாநாட்டில் தீர்மானம்!!
தமிழ்நாடு கிராமப்புற மேல்நிலை தொட்டி இயக்குவோர், துப்புரவு வேலை செய்வோர் நலசங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு நேற்று திருமங்கலத்தில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர் திறப்பு பணியில் ஈடுபட்டுள்ள பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம்:
தமிழ்நாடு கிராமப்புற மேல்நிலை தொட்டி இயக்குவோர், துப்புரவு வேலை செய்வோர் நலசங்கத்தின் சார்பில் திருமங்கலத்தில் நேற்று மதுரை மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். தலைவர் சேது, பெருளாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். அந்த சங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள பம்ப் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டை 2 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் – ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!
கிராமப்புற பஞ்சாயத்து சார்பில் கிராமப்புறங்களில் உள்ள பம்ப் ஆப்ரேட்டர்களாக பணிபுரியும் பணியாட்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்குதல், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், தூய்மை காவலர்களுக்கு பஞ்சாயத்துகளில் பணி பதிவேடுகளான எஸ்.ஆர் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்