தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டை 2 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் – ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 19-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிவிப்பிற்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும், மேலும் நடப்பு கல்வி ஆண்டினை 2 ஆண்டுகள் நீட்டிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடப்பு கல்வியாண்டு:
தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்ற சூழ்நிலை இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. பிற மாநிலங்களில் பள்ளிகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால் தமிழகத்தில் முதற்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதன் முடிவில் 95% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கிய நிலையில் 10 மாற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதன்படி பள்ளிகள் திறக்க தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – மருத்துவ துறை அறிவிப்பு!!
இது குறித்து அந்த சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே. இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தியது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை விட நேரடி வகுப்புகள் சிறந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை வருகிற 19-ஆம் தேதி முதல் திறக்குமாறு வெளியிட்ட அறிவிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உண்டா?? பயனாளர்கள் குழப்பம்!!
அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு எடுத்துள்ள வழிமுறைகள் இருந்தாலும் கூடுதல் வழிமுறைகளான மறுசுழற்சி செய்யும் முகக்கவசங்களை அரசு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் இவ்வளவு நாள் கடினமாக படித்து பொதுத்தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும். இந்த கல்வியாண்டை மேலும் 2 மாதங்கள் கூடுதலாக நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்