தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் காலி பணியிடங்களை நிரப்புதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 9 ஆம் தேதி போராட்டம் நடத்தினார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்கு பின் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் காரணமாக அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், தற்போது போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ. 625, 151 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு ரூ. 195 மற்றும் 91 நாட்களுக்கு மேல், 151 நாட்களுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு ரூ. 85, 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.