தக்காளி விலை கிலோ ரூ.60க்கு விற்பனை – அலைமோதும் மக்கள் கூட்டம்!
தமிழகத்தில் தக்காளி விலையானது ரூ.200க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பண்ணை பசுமை கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை
தமிழகத்தில் தக்காளி விலையானது கடந்த வாரம் அதிகரித்து கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதே விலை ஏற்றத்திற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு ஏற்கனவே பண்ணை பசுமை கடைகள், ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் விலையை கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று மாலை துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அகில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் அரசு கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழக கூட்டுறவு ஊழியர்களுக்கான வீட்டு கடன் தொகை ரூ. 20 லட்சமாக உயர்வு – அரசாணை வெளியீடு!!
அதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை தேனாம்பேட்டையில் தக்காளியை வாங்க காலை 6 மணி முதல் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அது மட்டுமில்லாமல் விற்பனை மையங்களில் ஒரே ஒரு கவுண்டர் மட்டுமே இருப்பதால்,பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. மேலும் இன்று ஸ்டாக் செக் நடைபெறுவதால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.