தமிழகத்தில் இன்று (நவ. 7) 19 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் இன்று (நவ. 7) 19 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று (நவ. 7) 19 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று (நவ. 7) 19 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு வானிலை அறிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவ.7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ரூ.105.13 கோடி செலவில் 579 புதிய வீடுகள் கட்டும் பணி தீவிரம் – அமைச்சர் கொடுத்த புதிய அப்டேட்!

கோயம்பத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நவ 8 முதல் நவ. 13 வரை பல பகுதிகளில் இலேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதிகளுக்கு நவ. 11 வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!