இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை கொட்டும் – வானிலை நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. மேலும், இன்றைய நிலவரப் படி வானிலை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதனை தொடர்ந்து இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போல் டிசம்பர் 9ம் தேதியும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.09) மின்தடை – விவரங்கள் வெளியீடு!
குறிப்பாக டிசம்பர் 8ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.