தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் அதிகரிப்பு – அரசு அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் அதிகரிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் அதிகரிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் நேரம் அதிகரிப்பு – அரசு அறிவிப்பு !!!

தமிழகம் முழுவதும் வரும் திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு தொடங்குவதால் டாஸ்மாக் கடைகள் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.

நேரம் அதிகரிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்குதலும், அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மே 6ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய புதிய வழிமுறைகளை அரசு அறிவுறுத்தியிருந்தது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே 12 மணி வரை செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டும் செயல் பட அனுமதி அளித்தது.

இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 26,456 ஆக பதிவாகியுள்ளது. தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்து உள்ளதால், தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் சலூன் கடைகள் செயல்படும் – அரசு உத்தரவு

முழு ஊரடங்கு காலத்தில் மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் மட்டும் பகல் 12மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். டாஸ்மாக் கடைகள் ஊரடங்கு காலத்தில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்றும் , நாளையும், (மே 8,9) மட்டும் டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!