தமிழகத்தில் இன்றும், நாளையும் சலூன் கடைகள் செயல்படும் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இன்றும் (மே 8) நாளையும் (மே 9) அனைத்து சலூன் கடைகளும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரம் வரை பதிவு செய்யப்படுகிறது. மேலும் நோய்த்தொற்று காரணமாக 4 ஆயிரம் வரை இறப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் இந்த பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், வார இறுதியில் முழு முடக்கமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வுகள் ஒத்திவைப்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தவிர சுற்றுலா தலங்கள், மதவழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், மால்கள், உணவு விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், பொது போக்குவரத்து, மதுபான கடைகள், சலூன்கள், மளிகை கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றிற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் தமிழகத்தில் நோய் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மாநிலம் முழுவதும் மே 10 முதல் 24 வரை 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இந்த இரண்டு நாட்களிலும் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்