தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரிப்பதால் அரசு மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முக ஸ்டாலின் அவர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.
மதுக்கடைகளை மூடவும்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் புதிய முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். முதல்வரின் முதல் கையெழுத்தாக 5 திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது பதவியேற்ற ஸ்டாலின் அவர்களுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவை தடுப்பதை காட்டிலும் மது விற்பனை செய்வதில் தான் அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மது விற்பனை ஆகும். அங்கு மக்கள் நெருக்கமாக நின்று மது வாங்குகின்றனர். ஊரடங்கு என்பதால் சமூக இடைவெளி இன்றி சண்டையிட்டு வாங்கி செல்கின்றனர்.
இந்தியாவில் முழு ஊரடங்கு தவிர்க்க முடியாதது – பிரதமர் மோடிக்கு கடிதம்!!
மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும் அதற்கான ஆணை இப்போது வரை பிறப்பிக்கப்படவில்லை. புதிய கட்டுப்பாடுகளால் அனைவரும் 4 மணி நேரத்தில் குவிந்து மதுப்புட்டிகளை வாங்கிச் செல்வர் என்பதால் மதுக்கடைகள் கொரோனா பரவல் மையங்களாக மாறும். எனவே தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும், அடித்தட்டு மக்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை இன்றே வெளியிட வேண்டும் அவ்வாறு அவர் வெளியிடுவார் என்று நம்புகிறேன் என அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்