மே 9ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு!!
கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மே 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் எதிர்பார்க்காத அளவிற்கு பரவி வருகிறது. ஒரு நாளில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தொட்டு விட்டது. இதனால் பல மாநிலங்களிலும் அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கோவா மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 29ம் தேதி இரவு 7 மணி முதல் மே 3ம் தேதி காலை வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.
நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 2.6 பில்லியன் UPI பரிவர்த்தனைகள் – NPCI அறிவிப்பு!!
தொற்று பாதிப்பு குறையாத காரணத்தாலும், தீவிரமடைந்து வருவதாலும் கோவா அரசு ஊரடங்கு உத்தரவை முன்னதாக மே 3 காலை 6 மணி முதல் மே 10ம் தேதி காலை 7 மணி வரை நீட்டித்திருந்தது. மேலும், மாநிலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மே 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மருத்துவ தேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணி முதல் 1 மணி வரை மட்டும் கடைகள் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்