கல்வி உதவித்தொகை பெற விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் – சிஇஓ உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக், ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை இந்த ஆண்டு பெற புதுப்பிக்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் உதவித்தொகை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு படித்து முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 2018-19 ஆம் ஆண்டு 11 ஆம் வகுப்பு படித்து 2019-20 கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
முதுகலை ஆசிரியர்களாக மாறும் அமைச்சுப் பணியாளர்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
இந்த ஆண்டு மாணவர்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடைய மாணவர்களின் பட்டியல் தயார் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான பள்ளிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் சமர்பிக்காமல் உள்ளன. எனவே விடுபட்ட பள்ளிகள் உடனே விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனை குறித்த வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்து வைப்பு!!
இதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 22 பள்ளிகளில் 279 மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ளனர். எனவே அவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்