முதுகலை ஆசிரியர்களாக மாறும் அமைச்சுப் பணியாளர்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
தமிழக அமைச்சுப் பணியில் இருந்து 2% ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெறுவதற்கான நியமன கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணிநியமன கலந்தாய்வு:
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சுப் பணியில் இருந்து நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கான பெயர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் வெளியிட்டு உள்ள உத்தரவில், அமைச்சுப்பணியிலிருந்து 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்ய பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
நேரடி வகுப்புகள் ஜூன் மாதத்திற்கு பின்னரே தொடங்கும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
அந்த பட்டியலில் வரிசை எண் 1 முதல் 150 உள்ள பணியாளர்களுக்கு சென்னை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கூட்ட அரங்கில் பிப்ரவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. 1 மணிநேரம் முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்ட பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
UPSC தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!
மேலும் கலந்தாய்வில் வரிசை எண் 1 முதல் 150 உள்ள பணியாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளவும் அவ்வாறு கலந்து கொள்ளாத பணியாளர்களுக்கு எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களால் பணி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தனியார் முதுகலை ஆசிரியர் பதவியில் பணியில் சேர விருப்பம் இல்லை எனில் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் தகவல் அளிக்க வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்காத பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் பணி ஒதுக்கீட்டில் உரிமை கோர இயலாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்