மே 3 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு!!
தமிழகத்தில் மே 3 முதல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளதால் பள்ளிகளில் பாடத்திட்டங்களை விரைவில் முடித்து பயிற்சி தேர்வுகள் நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்களை விரைவில் முடிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
இதன்படி மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. சில தனியார் பள்ளிகள் ஒரு பிரிவு பாடங்களை ஒரு மணி நேரம் நடத்தி ஒரு நாளில் 3 பாடங்களை முடித்து விடுகின்றன, இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் அவர்கள் மாதிரி தேர்வுகள் நடத்தி பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த ஒத்துழைப்பு மற்றும் வசதி அரசு பள்ளிகளில் இல்லை.
தமிழக ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – நாளை முதல் விநியோகம்!!
எனவே பொதுத்தேர்வுக்கு 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அரசு சார்பில் பாடத்திட்டங்களை விரைவில் முடித்து மாதிரி தேர்வுகள் நடத்தி மாணவர்களை விரைவில் தயார் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் கணவனும் செலுத்தி 100% தேர்ச்சி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்