பிப்.,20ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!!
தமிழக அரசின் திட்டம்:
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்காக மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பற்றவர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
திருவண்ணாமலை மாவட்டம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் வரும் பிப்ரவரி 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். மேலும், செய்யாற்றில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் தனியார் துறை சார்பில் நடத்தப்படும் இந்த முகாம் பிப்ரவரி 20ம் தேதி அன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
கல்வித்தகுதி:
முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற விரும்புவோர் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு போன்ற கல்வித் தகுதியை கொண்டிருக்க வேண்டும். முகாமிற்கு வருபவர்கள் தங்களின் 4 புகைப்படங்கள், குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வித்தகுதி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இணையத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை பெற விரும்பினால் 04175-233381 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I neead job