தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை – ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் ஜனவரி 19 ஆம் தேதி 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்றது. தற்போது 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு விளக்கம்!!
தொடர்ச்சியான பணிச்சுமை காரணமாக அரசு ஆசிரியர்கள் பலர் நீரிழிவு மற்றும் இணை நோய்கள் உள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில், “12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தினமும் அச்சத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். இதனால் அவர்களின் நலன் கருதி தொடக்க முதல் மேல்நிலை பள்ளிகள் வரையிலான ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.