மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் பள்ளிகளை மூட தேவையில்லை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பள்ளிகளை மூட தேவையில்லை என முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிகளுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன.
4 காவல் ஆய்வாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவல் பதக்கம்’ – தமிழக முதலவர் வழங்கல்!!
பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இருந்தபோதிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் கூறுகையில், “ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் உத்தரவின்படி ஜனவரி 20 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சில மாணவர்களுக்கு மட்டும் அறிகுறி இல்லாத கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
வேலை இல்லாதோருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் – சென்னை ஆட்சியர் அறிவிப்பு!!
மற்ற மாணவர்கள் அனைவரும் கொரோனா தொற்று இல்லாமல் தான் உள்ளனர். எனவே பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த பள்ளிகளை மூட தேவையில்லை. மாறாக அந்த வகுப்பறையை மட்டுமே மூட வேண்டும். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவனுக்கு நெருக்கமான மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்து, கிருமிநாசினி கொண்டு வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்