புதிய சிக்கல் காரணமாக பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கொரோனா வீரியம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் உருமாறிய வைரஸ் பரவி வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை:
கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட நிலையில் தற்போது கொரோனா வீரியம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதன்பின் பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியது.
CBSE பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதத்திற்கு பின் நடத்தப்படும்- மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
இந்நிலையில் இந்தமாதம் கல்லூரிகளுக்கான இறுதியாண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன. அதன் விளைவாக ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது, இந்நிலையில் தற்போது வீரியம் மிக்க கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது அதனால் பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா அதிகம் பரவிய மாகாணமான மஹாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து டெல்லி வந்த 5 பேருக்கும் சென்னை வந்த 1 ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது வீரியமிக்க கொரோனா வைரஸா என பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் இப்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்