CBSE பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதத்திற்கு பின் நடத்தப்படும்- மத்திய கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த 9மாதங்களாக திறக்கப்படாத நிலையில் 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொது தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்படி தற்போது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை தேர்வுகள் நடத்த வாய்ப்பில்லை என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை:
இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் தேர்வுகள் குறித்து எந்த முடிவும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களின் சுமையை குறைப்பதற்கு மத்திய அரசு பாடத்திட்டத்தில் 30% பாடங்களை குறைத்தது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மாதிரி பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஏற்பாடு செய்து வருகிறது.
TNPSC முக்கிய அறிவுப்பு – Hall Ticket Download செய்ய ஆதார் எண் கட்டாயம்!!
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் 10 மற்றும் 12 வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடாத காரணத்தால் பொது தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்க மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சமூக வலைத்தளத்தில் நேரலையில் நேற்று சந்தித்தார்.
அதன் முடிவில் பேசிய மத்திய அமைச்சர் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தவோ அல்லது ரத்து செய்யவோ சாத்தியமில்லை எனவும், கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் ஆனால் வழக்கம் போல் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்துவது கடினம் எனவே தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து பிப்ரவரிக்கு மேல் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.