தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கல்வித்தொகை சிக்கல்
தமிழக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரைபடிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி மேம்பாட்டிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.500, 6 ஆம் வகுப்பிற்கு ரூ.1000, 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு வரை ரூ.1500 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.85000/- ஊதியம் || தேர்வு கிடையாது!
இந்த உதவித்தொகை பெற 2023 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. பள்ளிகள் எமிஸ் தளத்தில் மாணவிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்யயாததால் இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பதால் பல மாவட்டங்களில் இன்னும் மாணவிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.