தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெப்பநிலை அதிகபட்சமாக நிலவி வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையமானது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலையை நிலவி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் நாமக்கல் மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இன்று முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
IDBI வங்கியில் Security Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழக கடல் பகுதியில் எந்தவிதமான எச்சரிக்கை அபாயங்களும் இல்லை என்பதால் மீனவர்கள் பயமின்றி மீன் பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.