பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் – தமிழக அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதால் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய பெற்றோர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். எனவே அந்த உத்தரவை மட்டும் நீக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு கடந்த மார்ச் மாதம் பள்ளிகளை மூட உத்தரவிட்டது. பள்ளிகளை திறக்க ஏற்ற சூழல் இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடத்தப்பட்டதால் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகளை திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு – 10 & 12ம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டம் குறைப்பு!!
இதன்படி நாளை முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்பது தொடர்பான உறுதி சான்றிதழை தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என ஒரு படிவத்தை பள்ளி நிர்வாகம் வழங்கியது.
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு – 10 & 12ம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டம் குறைப்பு!!
அதில் “பள்ளிகள் தொடங்கப்பட்டு முதல் நாளில் இருந்து எங்கள் அனுமதி உடன் தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம்” உள்ளிட்ட பல வாசகங்களை கொண்டிருந்தது. அதில் பள்ளி விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற பல பெற்றோர்கள் தயக்கம் தெரிவிக்கின்றனர். எனவே இந்த அறிவிப்பில் மட்டும் தமிழக அரசு தளர்வுகள் அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்