தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு – 10 & 12ம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டம் குறைப்பு!!

1
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு - 10 & 12ம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டம் குறைப்பு!!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு - 10 & 12ம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டம் குறைப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் (ஜனவரி 19) மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு – பாடத்திட்டம் குறைப்பு:

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் புதுச்சேரி, அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இம்மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் கடந்த டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இன்று முதல் ஜனவரி 25 வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். இதனால் அம்மாணவர்களுக்கு மட்டும் விரைந்து பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதன் முடிவில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி வரும் ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். பின்னர் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் துப்புரவு பணி, வகுப்பு அறைகளில் கிருமிநாசினி தெளித்தல், மாணவர்களுக்கு சானிடைசர், சத்து மாத்திரை வழங்குதல், பார்வையிட ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழு என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

ஜனவரி 27 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாநில அமைச்சரவை ஒப்புதல்!!

இந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் காரணமாக காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பொதுத்தேர்வு நடைபெற சில மாதங்களே உள்ளதால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிப்பது இயலாத காரியம். இதனால் மாணவர்களின் சுமை அதிகரிக்கும். எனவே பாடத்திட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக குழு அமைக்கப்பட்டது. அதற்கான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான பாடங்களை தவிர்த்து 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கான விபரங்களை பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. பயிற்சி வினாக்கள், மாதிரிகள், செய்முறைகள், பயிற்சிகள் போன்றவை அதிகளவில் குறைக்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. வணக்கம் .நான் ஒரு 11ஆம் வகுப்பு மாணவி. இன்று (19.01.2021) 10 மற்றும் 12 வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் 2 மாதத்தில் பொதுத்தேர்வு என மேற்கூரிய செய்தியின் மூலம் அறிந்தேன் . 10 ஆம் வகுப்பிலும் all pass 11 ஆம் வகுப்பிலும் all pass . கல்லூரிக்கு அடிப்படை கல்வி (11th) இல்லாமல் எப்படி மாணக்கர்கள் கல்லூரிக்குச் செல்ல இயலும் ? இந்த கல்வி ஆண்டு வேண்டாம் …2020-21 ஆம் கல்வியாண்டு 2021 -22 ல் தொடரட்டும் . .நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!