தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை – மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!
தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
அதில் கனமழை எச்சரிக்கை சென்னைக்கு விடுக்கப்படாத நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ. 22) விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.