தமிழகத்தில் 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – இரவில் வந்த அப்டேட்!!!
தமிழகத்தில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் இன்று (அக்.4) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்கள் என்ற முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் சில மாவட்டங்களில் கனமழையும், மிக கனமழை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
மழை எச்சரிக்கையை தொடர்ந்தும், நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாகவும், சென்னை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ. 4) விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை ஞாயிறு என்பதால் இந்த இடங்களுக்கு 2 நாள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.