தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண்கள் – விதிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்த விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 10 மாதங்களாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் உயர் வகுப்பு மாணவர்களான 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா தாக்கம் மாணவர்களுக்கு பரவியதால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன. மேலும் அவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அணைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
சென்னையில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அபராத அட்டவணை வெளியீடு!!
தேர்வுக்கான விதிமுறைகள்:
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாஸ்வோர்டடை பயன்படுத்தி வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து மாணவரக்ளுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுப்பிரிவு தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதிக்குள் கட்டாயம் நடத்தி முடிக்க வேண்டும்.
செய்முறை தேர்வு புறத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் விவரங்களை கட்டாயம் பாடவாரியாக பூர்த்தி செய்ய வேண்டும். அதனை செய்முறை தேர்வு மதிப்பெண்களுடன் கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும்.
தமிழகத்திற்கு வர இ-பாஸ் கட்டாயம் – ஆன்லைனில் பெற்றுக்கொள்ள எளிய முறை!!
பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட கீழே குறிப்பிட்ட பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர், புறத்தேர்வாளர்களாக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அகத்தேர்வாளர்களாக அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் உதவியாளர்கள், எழுத்தர், அலுவலர் உதவியாளர், துப்புரவு பணியாளர், குடிநீர் வழங்குபவர் போன்றவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – இன்று முக்கிய அறிவிப்பு!!
மேலும் செய்முறை தேர்வுகளுக்கு துறை அலுவலர்கள் நியமனம் செய்ய தேவையில்லை. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை புறத்தேர்வுகள் நடத்த தேவையான கட்டண தொகையை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத்தேர்வு இயக்குனரிடம் முன்பணமாக பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அதற்கான செலவுகள் குறித்த விவரங்களை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் செய்முறை தேர்வுகள் நடைபெறும் போது அந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியமாக முன்பணம் வழங்க மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு வழங்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிய சம்மந்தப்பட்டவர்களிடம் நீல மையினால் மட்டுமே கையெழுத்து பெற வேண்டும்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வெளியீடு!!
உயிரியல் பாடங்களை படிக்கும் மாணவர்களுக்கு 2 காலமாக பிரித்து உயிரி- தாவரவியல் மற்றும் உயிரி-விலங்கியல் பாடங்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். இயற்பியல் பாடப்பிரிவுகள் பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கு சைன்டிபிக் டிஜிட்டல் டைரியை மட்டுமே எடுத்து வர அனுமதி வழங்க வேண்டும்.