தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – இன்று முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக 9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 வகுப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் நோய்த்தொற்று குறைந்து வந்ததால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உயர்கல்வி பள்ளி மற்றும் கல்லூரிகள் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டு வந்தது. பின்பு நாளடைவில் கொரோனா பாதிப்பு பள்ளி மாணவர்களிடம் அதிகரித்து வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து, அவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Gold Rate in Chennai – இன்றைய தங்க விலை நிலவரம்!!
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு இன்று பிற்பகல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.