சென்னையில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அபராத அட்டவணை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியில் கொரோனா உறுதியாகி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதனை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.
சென்னை கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு முதல் பரவி வருகிறது. அதன் பின்னர் பல ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த காரணத்தினால் பல தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் மட்டும் கொரோனாவால் 1500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதனை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதற்கான அபாரதங்கள் குறித்த அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வெளியீடு!!
அபாரதங்கள் குறித்த அறிவிப்பு:
- சென்னையில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் பயணம் செய்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
- பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
- மேலும் பொது இடங்களில் தனி மனித சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
- சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க ரூ.10 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது.
- மேலும் வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் போன்ற இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் அவர்களுக்கு ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதம் வசூலிக்க மண்டல வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.