தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்தலுக்கு பின் செய்முறை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை – ஆசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!!
சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு நடைபெற இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாடங்களை நடத்தி முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தி முடிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தற்போது தெரிவித்துள்ளது. அதற்குள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்கவும் திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.