தமிழகத்தில் அரசுப்பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை – ஆசிரியருக்கு கொரோனா தொற்று எதிரொலி!!
தமிழகத்தின் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள காரணத்தால் அந்த பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரி 19 முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை – கல்வித்துறை எச்சரிக்கை!!
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிற ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10, 11ம் தேதிகள் பள்ளிக்கு விடுமுறை வழங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் கடுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.