தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் குறைப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் மே 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் குறுகிய காலத்தில் பாடங்களை முடிக்க முடியாமல் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என அரசிடம் தொடர்ந்து ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுத்தேர்வு பாடத்திட்டம்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் அவர்களுக்கு பாடங்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்ட காரணத்தால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு காலதாமதமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனைவரும் எதிர்பார்க்காத விதமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை பட்டியல் – செல்லுபடி காலம் நீட்டிப்பு!!
இதுகுறித்து மதுரை அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “அரசு பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் முதல் தேர்வுகள் தொடங்கப்படுவதால் ஏப்ரல் மாதம் முழுவதும் அவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். எனவே மார்ச் மாதத்திற்குள் அனைத்து பாடத்திட்டங்களை முடிக்க முடியாது. எனவே அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்தி பாடத்திட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்