தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை பட்டியல் – செல்லுபடி காலம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு வேலை வழங்க பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை பட்டியலின் கால அவகாசம் 1 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
பரிந்துரை பட்டியல் கால அவகாசம்:
தமிழக அரசின் மூலம் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு வாரியங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிரந்தரம் மற்றும் தற்காலிக பணியிடங்களை நிரப்ப ஒரு காலிப்பணிக்கு 5 பேர் என விகிதாச்சார அடிப்படையில் பதிவு மூப்பின்படி வேலையளிப்போருக்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இதற்கான பணியாளர்களை தேர்வு செய்ய வார நாளிதழில் விரம்பரம் செய்து அதன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று அவர்கள் பரிசீலனை செய்யப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்கள் அதிகம் வந்துள்ளதால் அதனை பரிசீலனை செய்ய கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே அவர்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்படும் பட்டியலின் செல்லுபடி காலம் 6 மாதத்தில் இருந்து ஓராண்டாக உயர்த்தி ஆணை வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தற்போது அந்த கோரிக்கையை ஆய்வு செய்த தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பளிப்போருக்கான பரிசீலனை பட்டியல் செல்லுபடி ஆகும் காலம் 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டாக உயர்த்தப்படுவதாக உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை செயலர் முகமது நஜிமுதின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்