தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கம் – கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால், மதிப்பெண்கள் இல்லாமல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொதுவாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடிப்படையில் தான் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால், 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 89,000 பேருக்கு கொரோனா உறுதி – 716 பேர் பலி!!
ஆனால் சில தனியார் பள்ளிகள் 11 ஆம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்த தொடங்கியுள்ளது. அந்தந்த பள்ளிகளில் சிறு தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களை தெரிந்து கொண்டு சேர்க்கை வழங்குகிறது. மாணவர்கள் எந்த பாடங்களில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என அறிந்து அந்த பாடங்களில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? எச்சரிக்கும் ஆர்வலர்கள்!
கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு தேர்வு கூட நடத்தப்படாத காரணத்தினால் 9 ஆம் வகுப்பு தேர்வுகள் அடிப்படையில் சான்றிதழ் வழங்கலாம் என பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.