நாடு முழுவதும் ஒரே நாளில் 89,000 பேருக்கு கொரோனா உறுதி – 716 பேர் பலி!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 89,129 ஆக உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,129 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 714 பேர் பலியாகியுள்ளனர். இதன் படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.64 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 1.23 கோடியை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கு தேர்தலுக்கு பின் விடுமுறை – புதிய தகவல்!!
அதில், “கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 89,129 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,23,92,260 ஆக உயர்ந்துள்ளது. இருந்த போதிலும் நேற்று தொற்றில் இருந்து 44,202 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,15,69,241 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 6,58,909 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்!
தற்போது இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93.68%, இறந்தவர்களின் விகிதம் 1.33% ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 5.00% ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 7,30,54,295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் நேற்று ஒரு நாள் கணக்குப்படி 30,93,795 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.