தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நாளை திறக்கப்பட இருக்கும் நிலையில், இந்த கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இல்லை என தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதற்கு கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
இது குறித்து கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து பரவும் தகவல் தவறானது என தெரிவித்துள்ளது. அதனால் 11 ஆம் வகுப்பு படிக்க இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இருந்த குழப்பம் விலகி இருக்கிறது.