
10 & 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளீர்களா? உங்களுக்கான சிறப்பு சலுகை..அரசின் அசத்தல் நடவடிக்கை!
மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் அம்மாநில அரசு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஹெலிகாப்டர் பயணம்:
இந்தியாவில் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பொது தேர்வின் மதிப்பெண்கள் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கிறது. அதனால் மாணவர்கள் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்து தேர்வை எழுதுகின்றனர்.
கோவிலில் தரிசனம் செய்ய ஆடை கட்டுப்பாடு – வெளியான முக்கிய உத்தரவு!
இந்த 10, 12ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களை பாராட்டும் விதமாக கல்வித்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாகவும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் அவர்களை ஹெலிகாப்டரில் அழைத்து சேலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற 88 மாணவர்கள் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர்.