கோவிலில் தரிசனம் செய்ய ஆடை கட்டுப்பாடு – வெளியான முக்கிய உத்தரவு!
கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியாவில் பல கோவில்கள் இருக்கின்றன. இந்நிலையில் ஹரித்வார் கோவில்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள் வெளியாகி இருக்கிறது.
ஆடை கட்டுப்பாடு
இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரித்வாரில் இருக்கும் கோவில்களில் மேற்கத்திய ஆடைகள் மற்றும் உடல் தெரியும்படி அணியப்படும் ஆடைகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அந்த அரசு வெளியிட்ட அறிவிப்பில் தென்னிந்திய கோவில்களில் ஷார்ட்ஸ் அணிய கூடாது என அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறது.
ஆண்களுக்கும் இனி 6 மாத கால குழந்தைவளர்ப்பு விடுமுறை – அரசின் சூப்பர் அறிவிப்பு!
மேலும் இந்த புதிய உத்தரவு ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என அனைவருக்கும் பொருந்தும் எனவும், அவர்கள் யாரும் மேற்கத்திய உடைகளில் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அகில பாரதிய ஆகார பரிஷத்தின் பிரெசிடன்ட் ஆன ரவீந்திர பூரி கூறுகையில் இந்திய கலாச்சாரத்தில் உடல் பாகங்கள் தெரியும்படி ஆடை அணிவது தவறானது எனவும் இந்த பாரம்பரியத்தை நமது சகோதரிகள், தாய்மார்கள் மற்றும் மகள்கள் ஆகியோர் அனைவரும் ஹரித்வாரில் உள்ள கோவில்களுக்கு வரும் போது பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.