ஆண்களுக்கும் இனி 6 மாத கால குழந்தைவளர்ப்பு விடுமுறை – அரசின் சூப்பர் அறிவிப்பு!
அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இதுவரை குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி ஆண் ஊழியர்களுக்கும் ஆறு மாத காலம் குழந்தை வளர்ப்பு விடுமுறையாக வழங்கப்படும் என அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குழந்தைவளர்ப்பு விடுமுறை:
அனைத்து மாநிலங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய குழந்தை பேறு விடுப்பு அல்லது குழந்தை வளர்ப்புக்காக விடுமுறை வழங்கப்படுகிறது. அது போல, கர்நாடக மாநிலத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தை வளர்ப்பிற்கு ஆறு மாதங்கள் வரைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆண் ஊழியர்களும் தங்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழகத்தில் தாறுமாறாக எகிறும் மின் கட்டணம்.. காரணம் இது தான் – ஷாக்கில் மக்கள்!
இந்நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கர்நாடகா அரசு திருமணம் ஆகாதவர்களும் இந்த ஆறு மாத குழந்தை வளர்ப்பு விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, குழந்தை பெற்ற அரசு ஊழியர்கள், விவாகரத்து பெற்றவர்கள், திருமணம் ஆகாதவர்கள் என அனைவரும் இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறையை ஆறு மாத காலத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
திருமணம் ஆகாமல் குழந்தை வளர்ப்பு விடுமுறையை எடுத்துக் கொள்ளும் ஆண் அரசு ஊழியர்களுக்கு பிற்காலத்தில் திருமணம் செய்த பின்னர் குழந்தை பிறந்தால் அதற்கான விடுமுறை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் தற்போதைக்கு இரண்டு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு பிற்காலத்தில் மீதமுள்ள நான்கு மாதங்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தால் அதற்கான நான்கு மாத விடுமுறை ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.