தமிழகத்தில் தாறுமாறாக எகிறும் மின் கட்டணம்.. காரணம் இது தான் – ஷாக்கில் மக்கள்!
தமிழகத்தில் வீடுகளுக்கு வருகிற ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ள நிலையில் அதனால் பொதுமக்கள் அத்திருப்தி அடைந்து இருக்கின்றனர்.
கூடுதல் வைப்பு தொகை
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படும். இந்த தொகை மின் இணைப்பு பெறும் போது குறிப்பிட்டதை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் இணைப்புகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் காரணமாக வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்களிடம் இருந்து கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்த தொகையை வசூலிக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு இரு முறை என்ற விதியின் கீழ் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணியை தொடங்க மின் வாரியம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 6 மாதம் மட்டுமே ஆன நிலையில் மீண்டும் அந்த அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது – பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு!
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இந்த பணி மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் கோடை காலம் என்பதால் பலரது வீட்டில் மின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் கட்டணமும் அதிகமாக இருப்பதால் இந்த தொகையும் சேர்ந்து கூடுதல் சுமையாக இருக்கிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், இந்த தொகை மின்சாரம் வேண்டி விண்ணப்பிக்கும் போது தெரிவித்த மின் உபயோகத்தை காட்டிலும் கூடுதலாக உபயோகம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த வைப்புத்தொகை கடைசி ஓராண்டில் பயன்படுத்திய மின்சார கட்டணத்தின் சராசரியை கணக்கிட்டு வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.