10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு – முதுகலை ஆசிரியர் கருத்து!!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பாட சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு தேதி நெருங்கி வருவதால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 19 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் குறுகிய காலத்தில் அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத நிலை உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை 45% பாடங்களை குறிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் கடினமான பாடங்கள் குறைக்கப்படாததால் முக்கிய பாடங்களை மட்டும் தற்போது நடத்திவிட்டு மற்றவைகளை மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு பெற இன்று கடைசி நாள் – தமிழக அரசு அறிவிப்பு !!
இதுகுறித்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு முதுகலை ஆசிரியர் ஒருவரிடம் கருத்து கேட்ட போது, “பள்ளிகள் திறக்கப்பட்ட போது 90% மாணவர்கள் வருகைப்பதிவு இருந்தது. ஆனால் 4 நாட்களில் அவர்களது வருகை குறைந்தது. தற்போது ஆன்லைன் தேர்வுகள் முக்கிய பகுதிகளில் இருந்து நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வில் மாணவர்கள் எவ்வாறு பதில் அளிப்பார்கள், என்பதை பொறுத்து பாடங்கள் குறைக்கப்படலாம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்