தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை எடுக்கத் தொடங்கினர். மேலும் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பெரிதளவில் ஆர்வம் செலுத்தவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே விரைந்து பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தமிழக சட்டசபை தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!!
தமிழக அரசும் அதற்காக கருத்து கேட்பு ஆலோசனை கூட்டங்களை நடத்தி நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி 18 முதல் பள்ளிகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கும் அடுத்தபடியாக 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கின. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வழி பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டது. மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 8 முதல் மீண்டும் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது குறித்தும் கல்வித்துறை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளது.
ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!!
அதன்படி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது அல்லது நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டிலும் கொரோனா பரவலால் ஆன்லைன் வகுப்புகள் தொடரவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாகவும், எனவே விரைந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
The article looks funny
First open the school plz