தமிழக சட்டசபை தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குப்பதிவு!!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நிலவரம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தினசரி புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதற்கிடையில் இன்று மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் சானிடைசர், முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் வரிசையில் நின்று சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குகளை பதிவு செய்தனர். காலை முதலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை புரிவதை பார்க்க முடிகிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் கூறுகையில், காலை 9 மணி வரையிலான நிலவரப்படி மாநிலம் முழுவதும் 13.80 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. தலைநகர் சென்னையில் 10.58 வாக்குகளும், அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 20.23 வாக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 9 மணி நிலவரப்படி 18.32 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா!
இம்முறை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்தனர். மேலும் கொரோனா அச்சமும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Sir