தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,672 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விடுமோ? என பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகம் முழுவதும் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தினசரி கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் வருகிற ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,03,479 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்து உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 12,789 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,842 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,66,913 ஆக அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,55,074 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.