தமிழக அரசு வருவாய்த்துறை கருணை அடிப்படை பணியிடங்கள் – புதிய பணி வரன்முறை வெளியீடு!!
அரசு வருவாய் துறைகளில் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி வரன்முறைப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழக அரசு அலுவலகங்களில் கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு பணி வரன்முறைபடுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை செயலாளர் முகமது நஜிமுதீன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்களில் கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு பணி வரன்முறை ஏற்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு பணி வரன்முறைப்படுத்த 2016 மார்ச் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. ஆனால் வருவாய் துறையில் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணிவரன்முறை செய்யாமல் பல ஆண்டுகளாக உள்ளனர்.
ஜேஇஇ நுழைவு தேர்வு முடிவுகள் – மார்ச் 7 ஆம் தேதி வெளியீடு!!
எனவே நிலுவையில் உள்ள பணி வரன்முறையை ஒரே அணையில் பிறப்பிக்க வேண்டும் என என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் படி 2.2.2016 முதல் 31.12.2019 வரை வருவாய் துறையில் கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், தட்டச்சர்கள், போன்றவர்களுக்கு ஒரே அரசாணையில் பணி வரன் முறை செய்ய வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது”, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்